மேலும் ஏழ்மை நிலையிலுள்ள இளம்பெண்கள், ஆடம்பரமாக வாழ நினைக்கக்கூடிய பெண்கள் உள்ளிட்டோரிடம் ஆசை வார்த்தைகள் கூறி வலையில் வீழ்த்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. விசாரணையில் இதனை கண்டுபிடித்ததுடன் திடீரென அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டோம்.
இதில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சோழபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (39), ரம்யா, பிரேமி ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தோம். அவர்களிடமிருந்து மூன்று டூவீலர்கள், ஆறு செல்போன்கள், ரூ.10,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். அத்துடன் மேலும் மீட்கப்பட்ட இரண்டு பெண்களை தஞ்சாவூரில் அரசு காப்பகத்தில் ஒப்படைத்திருக்கிறோம்” என்றனர்.