பிரசாந்த் கிஷோர் பார்வையில் சிறந்த காங்கிரஸ் தலைவர் யார்? – பிபிசி சிறப்புச்செய்தி

Share

  • சரோஜ் சிங்
  • பிபிசி செய்தியாளர்

பிரசாந்த் கிஷோர்
படக்குறிப்பு,

பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற தமது பொது அடையாளத்தை அகற்றி விட்டு தலைவராகும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் பிரசாந்த் கிஷோர், வலுவான காங்கிரஸ் தேச நலனுக்கு அவசியம் என்று கூறியிருந்தார். எனினும், காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் யார் இருக்க வேண்டும் என்பதில், அவரது கருத்து பரவலாக வெளிப்படுத்தப்படும் கருத்துடன் மாறுபடுகிறது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியோ அவரது சகோதரி பிரியங்கா காந்தியோ வர வேண்டும் என்பது பிரசாந்த் கிஷோரின் முதல் தேர்வு அல்ல.

பிபிசி உடனான சிறப்புக் கலந்துரையாடலின்போது பிரசாந்த் கிஷோர், “சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பதே எனது முதலாவது தேர்வு,” என்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மேலிடத்துக்கு காண்பித்த காணொளி காட்சி விளக்கத்தின்போது பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததாக ஊகங்கள் நிலவின. உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் தேர்தல் பொறுப்பை கவனித்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com