கோவை: கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை என கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது. கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.