பாகிஸ்தான்: இந்தியாவைவிட சீனாவுக்கு அதிக முக்கியத்துவமா? எஸ்.சி.ஓ. உச்ச மாநாட்டில் என்ன நடக்கிறது?

Share

இந்தியா, பாகிஸ்தான், சீனா, எஸ்சிஓ உச்சிமாநாடு, காஷ்மீர்

பட மூலாதாரம், @DrSJaishankar

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

  • எழுதியவர், ஜுபைர் அகமது
  • பதவி, பிபிசிக்காக

இறுக்கமான முகத்துடன் வணக்கம் வைத்து, அரை மனதுடன் தலையசைத்து, தங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதைப் போல் இரு நாட்டின் பிரமுகர்கள் விலகி நிற்கிறார்கள்.

கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எஸ்சிஓ உச்சி மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோர் சந்தித்த காட்சியை மேற்கூறியவாறு விவரிக்கலாம்.

முழு சந்திப்பும் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. ஆனால் அப்போது எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம், அடிக்கடி மோதிக்கொள்ளும் இரண்டு அணுசக்தி அண்டை நாடுகளுக்கு இடையிலான கசப்புணர்வை விவரித்தது. வார்த்தை மோதலும் நடந்தது.

பலதரப்புக் கூட்டங்களில் அடிக்கடி நிகழும் இந்தியா-பாகிஸ்தான் அரசியல் மோதலின் ஓர் உன்னதமான காட்சி அது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com