பாகிஸ்தான்: அரண்மனை போன்ற வீட்டில் மயிலை மட்டும் அந்த நபர் எடுத்துச் சென்றது ஏன்?

Share

பாகிஸ்தானில் நெருக்கடி

பட மூலாதாரம், SOCIAL MEDIA

அந்த நபர் நினைத்திருதால் பாகிஸ்தானின் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டின் எந்த மதிப்புமிக்க பொருளையும் எடுத்துச் சென்றிருக்கலாம். சுவரில் இருந்த கடிகாரம், கூரையில் தொங்கிக்கொண்டிருக்கும் சரவிளக்கு அல்லது சமையலறையில் இருக்கும் டின்னர் செட் என எதை வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளைகூட எடுத்திருக்கலாம்.

சோபாவின் டிசைனர் குஷன்கள், சுவர்களில் மாட்டப்பட்டுள்ள விலையுயர்ந்த ஓவியங்கள் அல்லது அலங்கார துப்பாக்கிகள் ஆகியவற்றையும் எடுத்திருக்கலாம்.

பணம், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், பூ ஜாடிகள், க்ரிஸ்டல் ஆஷ் ட்ரேக்கள், பட்டுத் திரைசீலைகள் அல்லது மேஜை விளக்குகளை எடுத்துச் சென்றிருக்கலாம். சுவரில் தொங்கும் வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தும் படங்களை எடுத்திருக்கலாம்.

ஆனால் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரின் ஆதரவாளர்கள் லாகூரில் உள்ள பாகிஸ்தானின் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டை சூழந்தபோது, அங்கிருந்த அத்தனை விலைமதிப்புமிக்க பொருட்களை எல்லாம் விட்டுவிட்டு சிலர் மயில்களை தூக்கிச் சென்றுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com