பாகிஸ்தானிடம் நவீன சீன போர் விமானங்கள் இருந்தும் அமெரிக்க எப்16 விமானத்தையே இன்னும் சார்ந்திருப்பது ஏன்?

Share

அமெரிக்க எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் நம்பியிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்களுக்கான தொழில்நுட்ப ஆதரவையும் உபகரணங்கள் விற்பனையையும் தொடர அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

அமெரிக்க டிஃபன்ஸ் செக்யூரிட்டி கோ-ஆபரேஷன் ஏஜென்சி (டிஎஸ்சிஏ) இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மொத்த அளவு 686 மில்லியன் அமெரிக்க டாலர்.

பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களை நவீனமயமாக்குவதும், அவற்றின் பயன்பாட்டின் போதான பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதுமே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தானை அனுமதிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 8-ம் தேதி நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், பாகிஸ்தானுக்கு லிங்க்-16 தொடர்பு / தரவு பகிர்வு நெர்வொர்க், குறியாக்க (cryptographic) கருவிகள், பயிற்சி மற்றும் விரிவான தளவாட ஆதரவு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் திறனைத் தக்க வைத்துக்கொள்ள உதவும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சி கூறுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com