பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கான மூன்று காரணங்கள்

Share

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. விராட் கோலி 60 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் உறுதியான ரன்குவிப்பு இல்லை.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 1 பந்து மீதம் இருக்கையில் 182 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லீக் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு இதன் மூலம் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெறக்கூடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com