சென்னை: பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை புகார் அளித்தது. ஆடியோ ஆதாரத்துடன் செய்தி பரவிய நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட அலுவலர் புண்ணியகோடி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்த விவகாரம் குறித்து போலீசில் புகார்..!!
Share