வயது முதிர்ந்தாலும் பாப்பாம்மாள் சில மாதங்களுக்கு முன்பு வரை ஆரோக்கியமாகவே இருந்தார். வாழை இலையில்தான் சாப்பிடுவார். ஒரு இட்லி, ஒரு தோசை என்று அளவாக சாப்பிடும் அவர், டீ, காபி குடிக்க மாட்டார். அவ்வபோது கொத்துமல்லி காபி மட்டும் குடிப்பார். நீளமான கூந்தல், ஒரிஜினல் பற்களுடன் ஆரோக்கியமாகவே இருந்தார்.


இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, பாப்பம்மாள் பாட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.