இதற்கான பெருமை கேரள மக்களுக்கும், ஆன்மீகவாதியான நாராயண குரு போன்றவர்களுக்கும் தான் சேரும். கேரளாவில் பெண்கள் மேலாடைகள் அணிய அனுமதி இல்லை என்கிற அளவுக்கு கடுமையான ஒடுக்குமுறைகள் இருந்தன. ஆனால், எப்போதெல்லாம் ஒடுக்குமுறைகள் தலைதூக்குகிறதோ, அந்த காலகட்டத்தில் உன்னதமான ஆத்மாக்கள் வெளிப்பட்டன.
1947-ம் ஆண்டுக்குப் பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒன்றுப்படுத்தியதால் நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறினோம். ஆனால் இதற்கான உண்மையான பெருமை கேரள மண்ணின் மைந்தர் ஆதிசங்கரருக்கு தான் போக வேண்டும். அவர்தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மக்களுக்கு கலாசார, ஆன்மீக ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்” எனத் தெரிவித்திருக்கிறார்.