பஞ்சாபில் சக மாணவிகளை ஆபாசப் படம் எடுத்ததாக பல்கலைக்கழக மாணவி கைது – சண்டிகர் அருகே நள்ளிரவில் போராட்டம்

Share

போராட்டம்

பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர்.

என்ன நடந்தது?

பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர் பல்கலைக்கழகம் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று நள்ளிரவு மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து இன்று அதிகாலை 3 மணியளவில் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், விடுதியில் சக மாணவிகள் குளிக்கும்போது வீடியோ எடுத்து, அவற்றை இமாச்சல பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை வைரலானதாகவும் கூறப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com