‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்: “மாமன்னன்’ படத்திற்கு பிறகு நடிப்பேனா என தெரியவில்லை”

Share

  • ச.ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக

அருண்ராஜா காமராஜ் - உதயநிதி

பட மூலாதாரம், PRO IMAGES

படக்குறிப்பு,

அருண்ராஜா காமராஜ் உடன் உதயநிதி

சட்டமன்ற உறுப்பினர், நடிகர் என இரண்டு தளங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இந்த வாரம் 20ம் தேதி ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் இந்தியில் வெளியாகி பல விவாதங்களை ஏற்படுத்தியது.

தற்போது ‘நெஞ்சுக்கு நீதி’யாக தமிழில் வெளியாகிறது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படப்பிடிப்புக்காக சேலத்தில் இருந்தவர் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில் இருந்து.

இந்தி திரைப்படமான ‘ஆர்ட்டிகிள் 15’ ரீமேக் தான் ‘நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுக்க காரணம் என்ன?

பதில்: ‘ஆர்ட்டிகிள் 15’ இந்தியில் வெளியான போதே பெரும் பேசுபொருளாக இருந்தது. மேலும் தேசிய விருது பெற்ற வெற்றி படமாகவும் அமைந்தது. படம் வெளியான சமயத்தில் நான் பார்த்தது தான். இரண்டு மூன்று வருடங்கள் ஆகி இருக்கும். அதற்கு பிறகு, போனி கபூர் என்னை சந்திக்க வேண்டும் என கேட்டிருந்ததாக சொன்னார்கள். நான் அவரை சந்தித்த போது, மூன்று படங்களுக்கான உரிமம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். அதில் ஒரு காமெடி படமும் இருந்தது. அவரிடம் நான், ‘மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்க விருப்பமில்லை சார். ‘ஆர்ட்டிகிள் 15′ வெளியான சமயத்தில் விவாதத்தை ஏற்படுத்திய ஒன்று. அதை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு சொல்கிறேன்’ என சொன்னேன். படம் பார்த்துவிட்டு அவரிடம், ‘இந்த படம் செய்யலாம். ஆனால், சரியான இயக்குநரிடம் தான் இதை செய்ய முடியும். ரீமேக் படத்தை நம் சூழலுக்கு ஏற்றாற் போல சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என இயக்குநருக்காக இரண்டு மூன்று மாதங்கள் காத்திருந்தோம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com