அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பயோசென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட் பேண்டேஜை கண்டுபிடித்துள்ளனர். இது நீண்டகால நீரிழிவு அல்சர் மற்றும் தீக்காயங்களை விரைவில் குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஏதோ ஒரு காயமோ, புண்ணோ ஏற்படுகையில், உடலானது அதைக் குணப்படுத்தும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும். இயற்கையாகவே அனைவரின் உடலமைப்பும் இவ்விதமே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதுவே நீரிழிவு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கையில், குணமடைவதற்கான நேரம் தாமதமாவதோடு, தொற்றுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.

இந்தக் காயங்களை எளிதாக, குறைந்த செலவில் குணமாக்கும் முயற்சியில் கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்மார்ட் பேண்டேஜை (Smart Bandage) கண்டுபிடித்தனர்.
சாதாரண பேண்டேஜ்களை போல அல்லாமல், பாலிமர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்களில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மருந்துகள் உட்பொதிக்கப்பட்டு இருக்கும். பேண்டேஜில் சேகரிக்கப்பட்ட மருந்துகள், காயம் வீக்கமடையாமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.