சென்னை: ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதேபோன்று மெரினாவில் உள்ள, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது, அதற்குஅம்மா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அங்கு பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, தியாகிகள் மற்றும் தலைவர்களின் நினைவுச் சின்னங்களை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.