சென்னை: நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெறுகிறது என்று பாமக அறிவித்துள்ளது. இது குறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை ஜன. 25ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் கலந்து கொள்வார்கள். பாமக வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாளை பாமக மாவட்ட செயலாளர் கூட்டம் நடக்கிறது
Share