சென்னை: தோல்வி பயம் காரணமாக திமுக கூட்டணி கட்சிகள் மீது அதிமுக அவதூறு பரப்புகிறது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கம்யூ. கட்சி மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதானி குழும விவகாரம் பற்றி ஈபிஎஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் எனவும் கூறினார்.
தோல்வி பயத்தால் அதிமுக அவதூறு பரப்புகிறது: முத்தரசன்
Share