`தோற்றுப்போன கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு!’ – சாடும் அன்பில் மகேஸ்

Share

தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி தி.மு.க சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசுகையில்,

  “ஒன்றிய அரசு, தோற்றுப் போன கொள்கையான மும்மொழிக் கொள்கையை நம் மீது திணிக்க பார்க்கிறது. தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறார்கள். இருந்த பொழுதும் தமிழ்நாட்டை முதலமைச்சர் சிறப்பாக நிர்வகித்து வருகிறார். அதன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடும், நம்பர் ஒன் முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சரும் இருந்து வருகிறார்கள்.

மற்றவர்கள் வீட்டை எட்டிப் பார்ப்பதே ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு வேலையாக போய்விட்டது. முத்தலாக் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் எனக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களுக்கு இடையூறு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையூறு செய்வது என்றால் இனிப்பு சாப்பிடுவது போல் உள்ளது. அதை எதிர்த்து ஒரு குரல் ஒலிக்கின்றது என்றால், அது தமிழ்நாடு முதலமைச்சர் குரலாக தான் இருக்கும். திராவிட மாடல் அரசு சிறுபான்மை மக்களுக்கு அரணாக உள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். ஆனால், பக்கத்தை வீட்டை எட்டிப் பார்த்து நாங்கள் செய்கிறோம் எனக் கூறி பா.ஜ.க முதலை கண்ணீர் வடிக்கிறது. இஸ்லாமியர்களையும், இஸ்லாமியர் அல்லாதவரையும் பிரித்து ஆளக்கூடிய சூழ்ச்சியை பா.ஜ.க-வினர் செய்து வருகிறார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com