தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள நூறு சதவிகித அ.தி.மு.க-வினரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இதில் எவ்வித குழப்பமும் இல்லை. எவ்வித சட்டச்சிக்கலும் இல்லை. வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைப்பொறுப்பை ஏற்பார்” என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் கம்பம் ஒன்றியச் செயலாளர் இளையநம்பி, மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட 150 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் அனைத்து தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.