“தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்” – திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம் | DMK secretaries meeting resolution that Tamil Nadu must be protected from anti-national forces

Share

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

அந்த தீர்மானத்தில், “ தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல், மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்போம். தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தி வேண்டும்.

தேச விரோதிகளுக்கு துணைபோகும் அடிமைகள், விலைபோகும் வீணர்களை அடையாளம் காட்ட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் ” என இந்த கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் செய்து ஏற்கப்பட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com