- மெர்லின் தாமஸ் & வோங் பி லீ
- பிபிசி நியூஸ் & பிபிசி நியூஸ் சோல்

பட மூலாதாரம், Getty Images
தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர்.
முதலில் டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர். எதனால், இந்த நெரிசல் ஏற்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக நடக்கும் முகக் கவசம் அணியாத ஹாலோவீன் திருவிழா இது.
சோல் நகரின் இரவு வாழ்க்கைக்குப் பெயர் பெற்ற இடாவூன் என்ற பகுதியில் குறுகலான தெருவில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் நுழைந்த நிலையில், இந்த விபத்து நேரிட்டது.
2014ம் ஆண்டு படகு மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 300 பேர் இறந்த சம்பவம் தென் கொரியாவை உலுக்கியது. அதற்குப் பிறகு, ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து இதுவாகும்.
தொடக்கத்தில், சம்பவம் நடந்த உடனே வெளியான வீடியோக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது.
பேரிடர் மீட்புக் குழுவினரை அந்த இடத்துக்குச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளார் அதிபர் யூன் சுக்-இயோல்.
பட மூலாதாரம், Getty Images
ஹாலோவீன் கூட்டத்தால் நிரம்பி வழியும் சோல் நகரம்.
நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 29) மாலை நிகழ்வுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் சிலவற்றில் இடாவூன் என்ற இந்த நிகழ்விடத்தில் மிக அதிகமாக கூட்டம் இருப்பதாகவும், அது பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மயங்கிய நிலையில் இருந்த பலருக்கு பொதுமக்களும், அவசரகால சேவைப்பிரிவினரும் சிகிச்சை அளிப்பதாகக் காட்டும் பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாயின.
ஒரு குறுதிய வீதியில் ஏராளமானோர் மீட்புதவியாளர்கள் பாதிக்கப்பட்டோருக்கு சுவாச மீட்பு சிகிச்சை அளிப்பதைப் போல காட்டும் படம் ஒன்றும் பகிரப்பட்டது.
இடாவூன் அருகே உள்ள ஹாமில்டன் ஓட்டல் பக்கத்தில் ஒரு விபத்து நடந்திருப்பதாகவும், மக்கள் விரைவாக வீடு திரும்பவேண்டும் என்றும் கேட்டுக்கொளளும் அவசரகால செய்தி ஒன்று யோங்சான் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அலை பேசிக்கும் அனுப்பப்பட்டது என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஐவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்குப்பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: