தூத்துக்குடியில் விஏஓ வெட்டிக் கொலை – பின்னணியில் மணல் மாஃபியாக்களா?

Share

விஏஓ கொலை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே இருந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இருவரில் ஒருவரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com