அல்காரிதம் கேமிங் மற்றும் போலி கலைஞர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதனால் ஸ்பாடிஃபை கடந்த ஆண்டில் மட்டுமே ஆயிரக்கணக்கான AI உருவாக்கிய பாடல்களை நீக்கியுள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில் 30% க்கும் மேற்பட்ட புதிய இசை AI- உதவியுடன் உருவாக்கப்படலாம், இது பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பாடல்களை உருவாக்க ஏற்கெனவே இருக்கும் பாடல்களையே முன்னோடியாக எடுத்துக்கொள்வது. பாடல்கள் உருவாக்கம் என்ற வணிகம் (முழுவதுமாக இல்லாவிட்டாலும்) செயற்கை நுண்ணறிவின் கைகளுக்குச் சென்றால் இசையில் புதுமை என்பதே போய்விடும் கவலை உள்ளது.
இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு பாடல்கள் விரைவில் தமிழிலும் உருவாக்கப்படலாம்.
செயற்கை நுண்ணறிவை விட அசல் கலைஞர்களின் இசையை நீங்கள் விரும்புவீர்களா, அல்லது எங்கிருந்து வந்தாலும் இசைதானே எனக் கேட்பீர்களா? உங்கள் கருத்தை கமண்டில் தெரிவியுங்கள்!