அங்குச் சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பியிருக்கின்றனர். இரண்டு பாம்பில் எந்த பாம்பு கடித்தது என்று தெரியாத காரணத்தினால், அங்கும் இரண்டு பாம்புகளையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.
சிறுவனின் தந்தை மருத்துவமனைக்குப் பாம்புகளுடன் வந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்குக் குழந்தைகள் நலப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.