திருவண்ணாமலை நிலச்சரிவு: கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம் – பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

Share

திருவண்ணாமலை நிலச்சரிவு
படக்குறிப்பு, அந்தப் பாறை மட்டும் வராமல் இருந்திருந்தால் தன் மக்கள் பிழைத்திருப்பார்கள் என்று கதறி அழுதார் செல்வி.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே வீட்டில் இருந்த ஏழு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழந்துவிட்டனர்.

தமிழ்நாட்டின் வட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல், திருவண்ணாமலை மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. டிசம்பர் 1ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, மலைச் சரிவில் வெள்ளம் அடித்துக் கொண்டு ஓடியுள்ளது.

வெள்ளத்தின் வேகம் காரணமாக, மண் சரியத் தொடங்கி, அந்த மலைப் பகுதியில் இருந்த பெரிய பாறை ஒன்று உருண்டோடத் தொடங்கியது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நின்று, பல புயல்களுக்கும், பல கனமழைகளுக்கும் சாட்சியாக இருந்த அந்தப் பாறை சில நொடிகளில் ஐந்து சிறுவர்கள் உள்பட ஏழு பேரின் உயிர்களைப் பலிவாங்கிவிட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com