ராஜஸ்தானில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில் மணமகள் திடீரென காணாமல்போனதையடுத்து, கட்டினாள் அந்தப் பெண்ணைத்தான் கட்டுவேன் என விடாப்பிடியாக 13 நாள்கள் காத்திருந்த மணமகனுக்கு, இறுதியில் காத்திருப்பின் பலன் கிடைத்துவிட்டது.
முன்னதாக ராஜஸ்தானின் சாய்னா கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் மே 3-ம் தேதியன்று திருமணம் நடக்கவிருந்தது.
அதன்படி சரியாக திருமண நாளில் மணமகன் வீட்டார் மணப்பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். கிட்டத்தட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்துவிட்டன. இந்த நிலையில், மணமகளும், மணமகனும் மணமேடையில் ஒன்றாகச் சுற்றிவரும் சம்பிரதாயத்துக்கு முன்னர், மணப்பெண் தனக்கு வயிற்று வலி எனக் கூறிவிட்டு, வீட்டருகே உள்ள ஒரு தொட்டியின் பக்கம் சென்றிருக்கிறார்.