தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மணிநேரத்தில் 4,500 நபர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் ஒரு நாளைக்கு எழுபதாயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துவந்தனர். திடீரென்று லட்சக்கணக்கில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அங்கே ஓர் அசாதாராண சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.
தேவஸ்தானம், பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் தயார் செய்து விநியோகித்து வருகிறது.
இந்நிலையில் வி.ஐ.பி பக்தர்கள் மற்றும் சாதாரண பக்தர்கள் திருப்பதிக்கு வரும்முன் திட்டமிட்டுக் கொண்டு வரும்படி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது. திருமலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து தரிசனம் செய்யுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.