திமுக மாநகராட்சி வார்டு கழக தேர்தல்: துரைமுருகன் அறிவிப்பு

Share

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட வார்டு கழகத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்றும், நாளையும் வேட்புமனுக்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: திமுகவின் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு கழகத் தேர்தல் மே 7ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டியிருப்பதால், தேர்தலில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள், மாவட்டக் கழகத்திலோ அல்லது பகுதிக் கழகத்திலோ வேட்புமனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதனை முறையாக பூர்த்தி செய்து ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதி மாலைக்குள் தலைமைக் கழக பிரதிநிதிகளிடம் விண்ணப்பக் கட்டணத்துடன் வேட்புமனுவினை தாக்கல் செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை, தலைமைக் கழகப் பிரதிநிதிகள் சரிபார்த்து, வேட்புமனு பரிசீலனை செய்து போட்டியிருக்கும் வார்டுக் கழகத் தேர்தலை மே 1ம் தேதி முதல் 7ம் தேதிக்குள், தலமைக்கழக பிரதிநிதிகள் தேதி, இடம் அறிவித்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு தேர்தல் நடைபெறும் நாட்களில் பிரச்னைகள் ஏதுமின்றி சுமுகமாக தேர்தல் நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com