திருமணங்கள் நடைபெறும் விதம் சமீப காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களை அடைந்துள்ளது. கூடவே, திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணையின் மீது வைக்கும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திருமணத்தின் ஆகப்பெரிய உறுதிமொழியே ‘ஒருவருக்கு ஒருவர் துணையாக, வாழ்நாள் முழுதும் இன்ப துன்பங்களில் ஒன்றாகக் கடப்போம்’ என்பதே. ஆனால் இங்கு ஒரு திருமண ஜோடி போட்டுள்ள ஒப்பந்தம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
விஜய் மற்றும் சிம்ரன் நடித்த ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் அக்ரிமென்ட் கல்யாணத்தைப் பார்த்திருப்போம். அதேபோல் அசாமை சேர்ந்த சாந்தி மற்றும் மிண்டு என்ற திருமண ஜோடி ஒப்பந்தம் (கான்ட்ராக்ட்) போட்டு கல்யாணம் செய்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் இருவரும் கையொப்பம் இடும் வீடியோவை வெட்லாக் போட்டோகிராபி (wedlock photography) , தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டது.