கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனிமவள கடத்தல் நடக்கிறது. தினசரி 4,000 முதல் 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. ஆனால் திமுக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாகனத்துக்கும் அதிக லஞ்சம் பெற்று கனிமங்களை விற்கிறார்கள்.
கனிமவள கொள்ளை தொடர்பாக சட்டமன்றத்திலேயே அதிமுக சார்பில் கடுமையாக பேசியுள்ளோம். கோவையை புறக்கணிக்கும் திமுக அரசை மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் புறக்கணிப்பார்கள்.