தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தடை முறை தேவையில்லை என்பது உண்மையா? | Does breastfeeding act as a contraceptive?

Share

ஆறு மாதங்களைக் கடந்துவிட்ட பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டால், இந்த வகை கருத்தடை முறை பலன் தராது. முதல் ஆறு மாதங்களுக்கு, இது 98 சதவிகிதம் பலன்தரும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் கடைப்பிடித்து, வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பெண்களிலும், 100-ல் இரண்டு பேர் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்பிருப்பதால் இதை 100 சதவிகித நம்பகமான முறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஆனாலும் ஹார்மோன்களை உள்ளடக்கிய கருத்தடை மாத்திரைகளுக்கு இணையான பலன் தரக்கூடியது இது. மிக முக்கியமாக, குழந்தையானது தாயின் மார்பகக் காம்புகளை உறிஞ்சி, பால் குடிக்க வேண்டியது அவசியம்.

அப்போதுதான், சில வகை ஹார்மோன்கள் உருவாகி, கருமுட்டை உருவாவதைத் தடுத்து, கருத்தடை முறையாகச் செயல்படும். இதைச் சரியாகப் பின்பற்றும் பட்சத்தில், பக்கவிளைவுகள் இல்லாமல் பலன்தரும் முறையாக இருக்கும். செலவில்லை என்பதொரு நல்ல விஷயம்.

அதேநேரம், இந்த முறையைப் பின்பற்றுவோருக்கு, பால்வினை நோய்த்தொற்றில் இருந்து எந்தப் பாதுகாப்பும் கிடைக்காது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com