தருமபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள முத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தொடர்ச்சியாக விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் சிறிய தொகையைக் கட்டி விளையாடத் தொடங்கியவர், அந்த விளையாட்டுக்கு அடிமையாகி கடன் வாங்கி… விட்ட தொகையை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், தனது வீட்டை விற்பதற்காகப் பெற்ற முன்பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்திருக்கிறார். இப்படி சுமார் 15 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியிலும், கேரளா லாட்டரியில் 3 லட்சம் ரூபாய் வரையும் பிரபு இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.