தமிழ் இலக்கியம்: புக்கர் பரிசு பரிசீலனையில் பூக்குழி நாவல் – மனம் திறக்கும் பெருமாள் முருகன்

Share

பெருமாள் முருகன் பேட்டி
படக்குறிப்பு,

எழுத்தாளர் பெருமாள் முருகன்

சர்வதேச புக்கர் விருதின் நெடும் பட்டியலில் தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது.

இந்நிலையில், அந்த நாவல், தன்னுடைய இலக்கியப் பயணம், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகள், அரசியல் பார்வைகள், மாதொருபாகன் பிரச்னை ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் பெருமாள் முருகன். அந்தப் பேட்டியிலிருந்து.

கேள்வி: எழுத்துலகுக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்? உங்கள் பின்னணி என்ன? ஆரம்பக்கட்டத்தில் உங்களை எழுதத் தூண்டியவர்கள் யார்?

பதில்: எழுத்துக்கான பின்னணி என்று எனக்கு ஏதும் கிடையாது. நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தலைமுறைதான் முதன்முதலாக பள்ளிக்கூடம் சென்று எழுத்தறிவு பெற்றவர்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com