‘தமிழ்நாட்டு மருமகன்’ தர்மேந்திரா: கிராமத்து இளைஞர் பாலிவுட்டில் கோலோச்சிய கதை

Share

தர்மேந்திரா
படக்குறிப்பு, தர்மேந்திரா தனது காலத்தில் உலகின் ‘மிக அழகான ஆண்களின் பட்டியலில்’ இடம் பெற்றவர்

தர்மேந்திரா பாலிவுட்டின் வெற்றிகரமான கதாநாயகன் என்பதைத் தவிர, அவர் பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறந்த கலைஞர் என்று சொல்லலாம். பஞ்சாபில் பிறந்த தர்மேந்திரா, தமிழ்நாட்டு மருமகன். பிரபல திரைப்பட நடிகை ஹேமமாலியின் கணவர். ஹேமமாலினி திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர்.

அனுபமா படத்தில் உணர்ச்சி பொங்கும் எழுத்தாளர் என்றால், சத்யகம், சுப்கே சுப்கேயில் நகைச்சுவை நடிகர் என நடிப்பின் பல பரிணாமங்களையும் வாழ்ந்து காட்டியவர் தர்மேந்திரா.

நிஜ வாழ்க்கையில் கவிஞர், காதலன், தந்தை, ;உலகின் மிக அழகான’ மனிதர்களில் ஒருவர், மது போதையிலிருந்து விடுபட்ட மனிதர் மற்றும் ஒரு காலத்தில் அரசியல்வாதியாக இருந்தவர்.

1935-ஆம் ஆண்டில் பஞ்சாபில் பிறந்த தரம் சிங் தியோல், தன்னுடைய பூர்வீக கிராமமான நர்சாலியிலிருந்து பம்பாய்க்கு சென்ற பயணத்தை கனவுப்பயணம் என்று சொல்லலாம்.

தர்மேந்திராவின் ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதிலும் உள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தர்மேந்திராவின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com