தமிழ்நாட்டில் RTE மறுக்கப்படுகிறதா? மத்திய மாநில அரசின் உரசலால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள்

Share

கல்வி உரிமைச்சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பையே தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை.

இதுதொடர்பான வழக்கின் விசாரணையில், இந்த ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்குச் செலுத்துவதில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலே இதற்குக் காரணமெனத் தெரியவந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த சட்டத்தின்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் 60 சதவீதத் தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லையென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் தான் நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு இதற்கு பதிலளித்துள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com