தமிழ்நாட்டில் தொடரும் முதியோர் கொலைகள்: முதியோர் நிலை என்ன? அரசு செய்வது என்ன?

Share

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

முதியோர் கொலைகள்

பட மூலாதாரம், Getty Images

திருநெல்வேலியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரண்டு பெண்கள் தங்களது பாட்டியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலத்தில் முதிய தம்பதியை அவர்களின் பேரன் கோபத்தில் வீட்டில் வைத்துப் பூட்டி தீ வைத்து கொளுத்தியதாக வெளியான புகார் தொடர்பாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய முதிய தம்பதியை அவர்களின் கார் ஓட்டுநர் பணம், நகைக்காக திட்டமிட்டு கொலை செய்து புதைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் புலன்விசாரணை நடந்துவருகிறது.

தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், முதியவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். முதியவர்களின்பாதுகாப்பு விவகாரங்களில் அரசு தீவிரமாக செயல்படவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முதியோருக்கு சட்டரீதியாக கிடைக்கவேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறும் அரசுத் தரப்பு, விரைவில் முதியோர் பாதுகாப்பு கொள்கை இறுதி செய்யப்பட்டு முதியோருக்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறுகிறது.

கௌரவம் பெற்றுத்தந்த முதியோர்உதவித்தொகை

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com