தமிழ்நாட்டில் கனமழை: புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

Share

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு
படக்குறிப்பு, கனமழை பாதிப்பு

இன்று ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் (மே 27) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 26 செ.மீ., எமரால்டில் 13 செ.மீ., அப்பர் பவானி, கோவை சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com