தமிழ்நாடு: ‘விடியல் இன்னும் வரல’ – கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனையின் வேதனை

Share

 தீபா

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை, சொக்கத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபா ஒன்றரை வயதில் போலியோ காரணமாக இடது கால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆனார். தீபாவின் பெற்றோர்கள் விவசாய கூலியாக இருந்தாலும் அவரை பள்ளிக்கு அனுப்பினர். 1980களில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் பழக்கம்  மதுரையில் பரவலாக இருந்தது. ஆனால், தீபா மூன்றாவது பெண் குழந்தையாகப் பிறந்தபோதும்,  அவரை வளர்க்கவும், படிக்கவைக்கவும் பெற்றோர் தயங்கவில்லை என்று கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com