சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியை புகழ்வதற்காக பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாக, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.