தமிழ்நாடு காவல்துறையில் அதிகரிக்கும் காவலர் மரணங்கள் – என்ன காரணம்?

Share

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்

தமிழ்நாடு காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

மே தினம் உள்பட ஆண்டு முழுவதும் உழைக்கக்கூடிய துறையாக இருந்தாலும் காவல்துறையில் சர்ச்சைக்குப் பஞ்சமில்லை. ‘இதர அரசுத் துறைகளைப் போல எந்த விடுப்பையும் அனுபவிக்க முடியாது. இதனால் ஏற்படும் மனஉளைச்சல்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.

தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்கு ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைந்த ஆட்சியில் முதலமைச்சர் ஆன மு.க.ஸ்டாலின், ‘காவலர்கள் தங்களின் உடல்நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும் அவர்கள் குடும்பத்தினருடன் போதிய நேரத்தைச் செலவிடுவதற்காகவும் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான அனைவருக்கும் ஒருநாள் ஓய்வு வழங்கப்படுகிறது’ என சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு காவல்துறை வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ‘ ஐந்து நாள் வேலை நாள்களில் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் தவிர்க்க முடியாத சூழலில் பணிபுரிய நேர்ந்தால் ஒரு நாளைக்குரிய ஊதியம் வழங்கப்படும். அந்தந்த காவல் நிலையத்தின் சூழலைப் பொறுத்து வார விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம், விடுப்பு எடுக்கும் காவலரின் பெயர் விவரங்கள் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விடுப்பு ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே முறையாக வழங்கப்படுவதாகவும் உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தால் காவலர்கள் மன நல ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக காவல் நிலையங்களில் ‘லாக்கப்’ குற்றங்கள் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com