தமிழறிஞர் ஒளவை நடராசன் காலமானார் – பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்

Share

அவ்வை நடராசன்
படக்குறிப்பு,

ஒளவை நடராசன்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் தமிழறிஞருமான ஒளவை நடராசன் காலமானார். அவருக்கு வயது 86.

சென்னையில் வசித்துவந்த ஒளவை நடராசன் பல ஆண்டுகாலமாகவே நீரிழிவு நோய்க்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்திருந்தது.

இரு நாட்களுக்கு முன்பாக உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவந்த நிலையில் இன்று மாலை ஏழே முக்கால் மணியளவில் அவர் உயிரிழந்தார்.

1936ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒளவை துரைசாமி – லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். புகழ்பெற்ற தமிழறிஞரான இவருடைய தந்தையார் செய்யாறில் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிவந்தபோது இவர் பிறந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com