அவனியாபுரம்: சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்களை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தமிழக மக்கள் எங்களது திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றுதான் கூறினேன். தமிழக மக்களை பற்றி நான் தவறாக சொல்லவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு தரவில்லையே என்றுதான் சொன்னேனே தவிர, நாங்கள் என்றும் தமிழக மக்கள் மீது பாசம் உள்ளவர்களாக தான் உள்ளோம். ஆனால் மதுரை எம்பி வெங்கடேசன் ஜெயிக்க முடியாதவர்களின் டுடோரியல் கல்லூரியாக ராஜ் பவன் உள்ளது என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக மக்களை தவறாக கூறவில்லை தமிழிசை விளக்கம்
Share