தமிழக காவல்நிலையங்களில் அதிகரிக்கும் மரணங்கள் – மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்

Share

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்

விக்னேஷ்

தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறி விட்டதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். ‘புதிய அரசு பொறுப்பேற்றவுடன் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக மூன்று தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தோம். அதன்படி, இந்த அரசு செயல்பட்டிருந்தால் காவல் மரணங்கள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை’ எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விக்னேஷ் மரணம்; தொடர் போராட்டம் ஏன்?

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 25 வயதான விக்னேஷ் என்பவர் குதிரை ஓட்டும் வேலையை செய்து வந்துள்ளார். இவரும் சுரேஷ் என்ற நபரும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி புரசைவாக்கத்தில் உள்ள கெல்லீஸ் அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் இருவரையும் விசாரித்துள்ளனர். தொடர்ந்து தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தபோது விக்னேஷ் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்குப் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்ததால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்.

முன்னதாக, வலிப்பு ஏற்பட்டதாலேயே விக்னேஷ் இறந்ததாக காவல்துறை தரப்பில் வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்நிலைய எழுத்தர் முனாஃப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com