தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்: “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை”

Share

  • பிரபுராவ் ஆனந்த்
  • பிபிசி தமிழுக்காக

இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் இலங்கையில் இருந்து இதுவரை 75 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள நிலையில், திங்கள் கிழமை அதிகாலை 2 மாத கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு பைப்பர் படகில் புறப்பட்ட வவுனியா மாவட்டம் சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் மற்றும் 2 மாத கை குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் திங்கள் கிழமை அதிகாலை 2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு பின் இந்த 5 இலங்கைத் தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com