இந்த தண்ணீர்த் தொட்டி திறப்பு விழாயொட்டி, அந்தப் பகுதிப் பெண்கள் சிலருக்கு சில்வர் குடங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், புதிதாகத் திறக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியிலிருந்து அந்த சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து பெண்களுக்கு வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி மாநகராட்சியின் 54-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் புஷ்பராஜ் சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து அமைச்சரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், குடங்களை வழங்குவதில் பொறுமையாகச் செயல்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு திடீரென கவுன்சிலர் புஷ்பராஜை தலையில் ஓங்கி அடித்தார். கவுன்சிலர் புஷ்பராஜை அமைச்சர் கே.என்.நேரு அடிப்பது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.