இந்நிலையில், புதிய உணவுகளைத் தேடிச் சென்று பதிவிடும் உணவு பதிவர் கொல்கத்தா டிலைட்ஸ் (@kolkatadelites), ஒரு கடையில் ரசகுல்லாவில் செய்யப்படும் தேநீர் பற்றிப் பதிவிட்டுள்ளார்.
அதில் முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி, டீத்தூளைச் சேர்த்து வடிகட்டி, பரிமாறவிருக்கும் கப்பில் ரசகுல்லாவை நசுக்கிப் போட்டு தேநீரை மேலே ஊற்றிக் கொடுக்கப்படுகிறது.
இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிலர் இதன் சுவையை அறிய ஆவல் கொள்வதாக நேர்மறை கமென்டுகளும், சிலர் `தண்ணீரோடு உப்பையும், மிளகாயும் கலந்து கொடுக்கும் ஒரு காலம் விரைவில் வரும்’ என எதிர்மறை கமென்டுகளையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.
நீங்களே சொல்லுங்கள்… தேநீரில் ரசகுல்லா – இந்த காம்பினேஷன் எப்படியிருக்கும்?