டிரம்ப் நடவடிக்கையால் தினமும் அச்சத்தில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள் – என்ன நடக்கிறது?

Share

தடுப்புக் காவல், விசா ரத்து - டிரம்ப் நடவடிக்கையால் அச்சத்தில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கடந்த சில வாரங்களாக எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி சாதாரண ஆடையில் வரும் அதிகாரிகள், மாணவர்களை அடையாளம் தெரியாத வாகனங்களில் ஏற்றி தடுப்பு காவல் முகாம்களுக்கு அழைத்துச் செல்வது அமெரிக்காவில் வாடிக்கையாகிவிட்டது.

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தொடர்ச்சியாகப் பார்க்கின்ற ஒரு காட்சியாக இந்தக் கைதுகள் மாறிவிட்டன.

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அந்த வீடியோவில் தோன்றும் மாணவர்கள் யாரும் எந்தவிதமான குற்ற வழக்குகளையும் எதிர்கொள்ளவில்லை. மாறாக அவர்களின் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களில் பங்கேற்ற காரணத்திற்காகக் குறிவைக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் படிப்பதற்காக விசா பெற்றிருப்பதை ஒரு ‘சிறப்புரிமை’ என்று டிரம்ப் நிர்வாகம் அடிக்கடி கூறி வருகிறது. மேலும் பல்வேறு காரணங்களுக்காக, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விசா ரத்து செய்யப்படும் என்றும் கூறுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com