ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – அடுத்தது என்ன?

Share

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

நவம்பர் 8-ஆம் தேதி கூட்டத் தொடர் துவங்கியதும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 370-வது சட்டப்பிரிவு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் அந்தத் தீர்மானத்தை திரும்பப் பெறக் கோரி, வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக, சபாநாயகரின் மார்ஷல்கள் சலசலப்பை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்த பிறகு அங்கே நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் இதுவாகும்.

சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஐந்து நாட்களைக் கொண்ட முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com