சைஃப் அல்-அடில்: அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ”நீதியின் வாள்”

Share

  • மானிட்டரிங் பிரிவு
  • பிபிசி நியூஸ்

எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது.

எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்கிய சகாக்களாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஐந்து அல்-காய்தா உறுப்பினர்களில் அவர் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கிறார். இப்போது ஜவாஹிரிக்கு பின் தலைமைப் பதவியை ஏற்கப் போகிறார் என்று நம்பப்படுகிறது.

ஆனால் ஒரு பிரச்சனை இருக்கலாம்.

அல்-காய்தா தீவிர எதிரியாகக் கருதும் நாடான ஈரானில் அரசுக் கட்டுப்பாடுகளின் கீழ் அல்-அடில் தற்போது வாழ்கிறார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com