
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி வோர்கோவிச், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
விஸ்வநாதன் ஆனந்த் கூறும்போது, “ஃபிடே நிர்வாகத்துடன் இணைந்து இந்தியாவில் செஸ் விளையாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் முழுமையாக வெற்றியடைந்துள்ளது.