சென்னை: வெளிநாட்டு வனவிலங்குகள் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையத்தில்தான் அதிகமாக கடத்தப்படுகிறதா?

Share

சென்னை சர்வதேச விமான நிலையம், வனவிலங்குகள் கடத்தல், சென்னை சுங்கம்

பட மூலாதாரம், Chennai Custom

படக்குறிப்பு, சிறிய வகை குரங்கினங்கள், பச்சை மற்றும் நீல நிற நெடுவாலிகள் (இக்வானா), பாம்புகள், பறவைகள் போன்றவை கடத்தி வரப்படுகின்றன

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று சென்னை சுங்க அதிகாரிகள் 5193 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளை (Red-eared slider turtles), சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். ரமேஷ், தமீம் அன்சாரி என்ற இரண்டு பயணிகள் மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது இந்த ஆமைகளை கடத்தி வந்துள்ளனர்.

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் அந்த 5193 ஆமைகளும் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதில் ஈடுபட்ட ரமேஷ், தமீம், மேலும் இரண்டு நபர்கள் சுங்க சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இது எப்போதாவது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடக்கும் ஒன்றல்ல. செப்டம்பர் 27ம் தேதி அன்று இதே வகையைச் சேர்ந்த 4968 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏப்ரல் மாதத்திலும் 5000 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com